தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 18, 2020, 5:07 PM IST

ETV Bharat / state

ஊரடங்கு மீறல்: சுமார் 13.5 கோடி ரூபாய் அபராதம் வசூல்

சென்னை: ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் 86 நாள்களில் ரூபாய் 13 கோடியே 38 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

tn police collect 13.5 crore fine in curfew violators
tn police collect 13.5 crore fine in curfew violators

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல் துறையினர் நடவடிக்கையும் எடுத்துவருகின்றனர்.

தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து காவல்து றையினர் வீடுகளை விட்டு வெளியேறுபவர்களை கட்டுப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட கடந்த 86 நாள்களில் அரசின் தடை உத்தரவை மீறியதாக இதுவரை 6 லட்சத்து ,57 ஆயிரத்து,399 பேரை காவல் துறையினர் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 4 லட்சத்து, 78 ஆயிரத்து, 714 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அபராதமாக 13 கோடியே, 38 லட்சத்து, ஒராயிரத்து 229 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details