தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் அண்ணன் மகனிடம் நலம் விசாரித்த முதலமைச்சர்

சென்னை: சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அண்ணன் மகனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் நலம் விசாரித்தார்.

By

Published : Jun 11, 2019, 11:59 PM IST

நிலம் விசாரித்த முதலமைச்சர்

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் சி.வி.ராதாகிருஷ்ணன் ஆழ்வார்பேட்டையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சி.வி. ராதாகிருஷ்ணனின் மகன் அர்ஜுன் (20) காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்.

இவருக்கு அவரது தந்தை ரூ.24 லட்சம் மதிப்புடைய பைக் வாங்கி கொடுக்கப்பட்டதாகவும், இதனை டெஸ்ட் டிரைவ் செய்ய வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒட்டிச் சென்றபோது நிலை தடுமாறி கிழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதைப்பார்த்த சக வாகன ஒட்டிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் அண்ணன் மகனிடம் நலம் விசாரித்த முதலமைச்சர்

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அர்ஜூனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

ABOUT THE AUTHOR

...view details