தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி - தலைமைப் பதிவாளர்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஜூன் 14ஆம் தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே அனைத்து பிரிவுகளும் செயல்பட வேண்டும் என, உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

Madras Highcourt
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jun 10, 2021, 5:59 PM IST

கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், நீதிமன்றம் வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும்படி, தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

அதை ஏற்று நீதிமன்றத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்குடன், நேரடியாக வழக்கை விசாரிக்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு, காணொலி மூலமாக வழக்குகள் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து வழக்கறிஞர் அறைகள், சங்க அலுவலகங்கள், நூலகங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் நீதிபதிகள் மட்டும் நீதிமன்றங்களுக்கு வந்து வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று அரசு வழக்குரைஞர்கள் சிலர் நேரில் ஆஜராகி வருகின்றனர். கரோனா பரவலை தடுக்கும் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஜூன் 14ஆம் தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, அனைத்து பிரிவுகளும் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என, உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ப. தனபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிமன்ற ஊழியர்கள் இரு பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் இரண்டு நாட்கள் பணி என, சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும், மற்றவர்கள் பணிக்கு வரத் தயாராக வீட்டில் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றம் பிறப்பிக்கும் வழிகாட்டுதல் மட்டுமல்லாமல், கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும், தலைமைப் பதிவாளர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details