தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவிட்-19 அறிகுறியற்ற நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர் கொடுக்கும் வழிமுறை இதோ... - Kabasura ayurvedic drink to aymptomatic covid-19 patients

சென்னை : கோவிட்-19 நோய் அறிகுறியற்ற நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சையுடன் கபசுரக் குடிநீர் பருகும் வழிமுறைகளை அரசு ஆணையாக வெளியிட்டுள்ளது.

Covid19
Covid19

By

Published : Apr 26, 2020, 1:19 AM IST

Updated : Apr 26, 2020, 1:43 AM IST

அந்த ஆணையில் தமிழ்நாடு அரசு கூறியுள்ள வழிமுறைகள் வருமாறு :

1. துத்தநாகம் 150 மி.கி. மாத்திரை - ஒரு நாளைக்கு ஒரு முறை என 10 நாள்களுக்கு.

2. வைட்டமின் சி 500 எம்ஜி அல்லது மல்டி வைட்டமின் மாத்திரைகள் ஒரு நாளைக்கு ஒரு முறை என 10 நாள்களுக்கு.

3. நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுரக் குடிநீர் மூலிகைத் தூள் (ஒரு நபருக்கு) தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை:

ஒரு கிராம் நிலவேம்பு குடிநீர் அல்லது கபசுரக் குடிநீர் மூலிகைப் பொடியை 240 மில்லி தண்ணீரில் கரைத்து நன்கு கொதிக்க வைத்து 60 மில்லி வடிகட்டியாகக் குறைத்து மூன்று மணி நேரத்தில் இதைக் குடிக்கவும், தினமும் காலையில் உணவுக்கு முன்பு ஒரு மாதம்.

அறிவுறுத்தப்பட்ட கஷாயம் அளவை உட்கொள்வது :

வயது வந்தோருக்கு 60 மில்லி மற்றும் 30 மில்லி சிறு குழந்தைகளுக்கு. கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கூறிய மருந்துகள், மூலிகைத் தூள் கரோனா தடுப்பு முன்னணி ஊழியர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மற்றும் பிற நபர்கள் கோவிட்-19 தொற்றுநோயை எதிர்க்கும் மற்றும் அவர்களின் பணி செயல்திறனை மேம்படுத்துவதோடு, மேற்கூறிய ஆலோசனையைப் பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : காற்றில் பறந்த சமூக இடைவெளி! பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்!

Last Updated : Apr 26, 2020, 1:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details