தமிழ்நாட்டில் புதிதாக தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையிலும், அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையிலும் பள்ளிக் கல்வித் துறையில் இயக்குநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பின்படி,
- மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநராக பணியாற்றிவந்த ராமேஸ்வரம் முருகன், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி வந்த இயக்குநர் கருப்பசாமி மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகத்தில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக பணியாற்றி வந்த சேதுராம வர்மா தொடக்கக் கல்வித் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.