கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுக சார்பாக தனது தோழி சசிகலாவுடன் பசும்பொன் சென்று ரூ.4 கோடி மதிப்புள்ள 13.5 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். இது குறித்து 2010ஆம் ஆண்டு, தான் அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் அதனை வழங்கினார்.
இந்த தங்கக் கவசம் அப்போது அதிமுக-வின் பொருளாளராக இருந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் பெயரில் மதுரை அண்ணாநகரிலுள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கவசம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தியின்போது, மதுரையிலிருந்து ஓ. பன்னீர்செல்வம், தேவரின் குடும்ப வாரிசான காந்தி மீனாள் நடராஜன் ஆகிய இருவரும் கையொப்பமிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு அதனை கொண்டு செல்வது வழக்கம்.