தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரிடம், தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

By

Published : Aug 12, 2022, 3:16 PM IST

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க ஸ்டாலின் கோரிக்கை
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க ஸ்டாலின் கோரிக்கை

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

“தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் 6-8-2022 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற நிலையில், 10-8-2022 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கையிலுள்ள திரிகோணமலை கடற்படைத் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்படகினையும் இலங்கை அரசு விரைவில் விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” எனக்குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:இலங்கை கடற்படையின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - எம்.பி சு.வெங்கடேசன்!

ABOUT THE AUTHOR

...view details