தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 11, 2020, 7:53 PM IST

ETV Bharat / state

தமிழ்நாட்டில் நூறு விழுக்காடு நெகிழி பயன்பாடு ஒழிக்கப்படும் - முதலமைச்சர் உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் நூறு விழுக்காடு நெகிழி பயன்பாடு ஒழிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

tn assembly_ cm speech
tn assembly_ cm speech

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளில் நெகிழி பயன்பாடு முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதா என்று சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் பழனிசாமி," கொடைக்கானல், ஏற்காடு போன்ற வனம் நிறைந்த பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய சீரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள், பல்வேறு அமைப்புகள், இளைஞர்கள் மூலமும் பல்வேறு விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

தமிழ்நாடு அரசு நெகிழி பயன்பாட்டை தடுப்பதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்கும்போது, பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்திலேயே நெகிழி தடை சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும். நெகிழி ஒழிப்பு மிகவும் முக்கியமான திட்டம்.

எனவே, தமிழ்நாடு அரசு இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் நெகிழி ஒழிப்புத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நூறு விழுக்காடு நெகிழி பயன்பாடு ஒழிக்கப்படும்" என்று முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்தார்.

இதையும் படிங்க:"நெகிழியை முழுமையாக ஒழிக்க மக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு அவசியம்" - முதலமைச்சர் வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details