தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி துணை முதலமைச்சரிடம் மனு! - துணை முதலமைச்சர்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யவேண்டும் என சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்த எம்பி எம்எல்ஏக்கள் துணை முதலமைச்சரிடம் மனு அளித்தனர்.

துணை முதலமைச்சரிடம் அளித்த மனு
துணை முதலமைச்சரிடம் அளித்த மனு

By

Published : Jan 10, 2020, 8:31 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று இந்த விவகாரத்தில் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்நிலையில், எம்எல்ஏ அபூபக்கர் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து சிறுபான்மையின தலைவர்களிடம் முதலமைச்சர் கருத்து கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

துணை முதலமைச்சரிடம் அளித்த மனு

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரை இன்று நேரில் சந்திக்கவிருக்கும் நிலையில் நேற்று சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்த எம்பி எம்எல்ஏக்கள் துணை முதலமைச்சரை சந்தித்து சட்டத்தை ரத்து செய்வதற்கான கோரிக்கை மனுவினை வழங்கினர். இந்த சந்திப்பின் போது அமைச்சர் நிலோபர் கபில், அதிமுக ராஜ்யசபா எம்பி முஹம்மது ஜான், எம்எல்ஏ அபூபக்கர், முன்னாள் எம்பி அன்வர்ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல், சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி, செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை பகுதி என்பதால் விபத்துகள் அதிகம் ஏற்படுவதாகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தலைகாயத்திற்கு தனிப்பிரிவு இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்

இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை பத்து கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தலைக்காயத்திற்கான தனிப் பிரிவு அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்' - குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details