மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்குப் பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 28ஆம் தேதி தொடங்கியது. மறைந்த முன்னாள், இந்நாள் பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டத்தொடரின் முதல் நாள் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், ஜூலை 1ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.