திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, புதுகாமூர் பகுதியில் முத்தம்மாள் என்பவரது வீட்டில் இன்று(நவ.15) காலை சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட விபத்தில் காமாட்சி, ஹேமநாதன் என்ற சிறுவன், சந்திரா அம்மாள் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்தத் துயர சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.