தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தரையிறங்க முடியாமல் வானில் தவித்த மூன்று விமானங்கள் - chennai district news

சென்னை, புறநகா் பகுதிகளில் இன்று (செப்.29) மாலை திடீரென பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சுமாா் ஒரு மணி நேரம் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

Three planes fluttered in the sky unable to land
Three planes fluttered in the sky unable to land

By

Published : Sep 29, 2020, 9:12 PM IST

மதுரையிலிருந்து சென்னைக்கு 81 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த தனியாா் (ஸ்பைஜெட்) பயணிகள் விமானம் சென்னையில் மாலை 5.20 மணிக்கு தரையிறங்க வேண்டும். அப்போது சென்னை விமானநிலைய பகுதியில் பலத்த சூறைக்காற்று, இடி, மின்னல் இருந்ததால் விமானம் தரையிறங்க விமானநிலைய கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் அனுமதி கொடுக்கவில்லை. இதனால், விமானிகள் விமானத்தை வானிலேயே தொடா்ந்து வட்டமடிக்க செய்தனா்.

அதைபோல் தோகாவிலிருந்து 128 பயணிகளுடன் மாலை 5.15 மணிக்கு தரையிறங்க வந்த மீட்பு சிறப்பு விமானம், குவைத்திலிருந்து மாலை 5.45 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டிய சரக்கு விமானம் ஆகியவைகளும் தரையிறங்க முடியாமல் வானில் தொடா்ந்து வட்டமடித்தன.

மாலை 6 மணிக்கு மேல் வானிலை சீரடைந்ததும் மூன்று விமானங்களும் ஒன்றன் பின்பு ஒன்றாக தரையிறங்கின. இதனால் சென்னை விமானநிலையத்தில் ஒரு மணி நேரம் விமான சேவைகள் பாதித்தன.

இதையும் படிங்க:பாஜக - சிவசேனா மூத்த தலைவர்கள் ரகசிய சந்திப்பு !

ABOUT THE AUTHOR

...view details