தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உணவு வர தாமதம்: உணவக உரிமையாளரைத் தாக்கிய மூவர் கைது - chennai crime news

திருவல்லிக்கேணி அருகே உணவு வர தாமதமானதால் குடிபோதையில் உணவக உரிமையாளர் தாக்கிய மூன்று நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மூவர் கைது
மூவர் கைது

By

Published : Dec 17, 2021, 12:03 PM IST

சென்னை: திருவல்லிக்கேணி நடேசன் சாலையைச் சேர்ந்த தேவராஜ் (42) பெரியமேடு ஈவி ஆர் சாலையில் சொந்தமாக ஜாய் என்ற பெயரில் உணவகம் வைத்து நடத்திவருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு (டிசம்பர் 16) உணவகத்துக்கு குடிபோதையில் சென்ற நான்கு பேர் உணவு ஆர்டர் செய்து, சிறிது நேரம் உணவுக்காகக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த நான்கு பேரும் உணவக ஊழியரைத் தகாத சொற்களால் பேசியுள்ளனர்.

இதனைக் கண்ட உணவக உரிமையாளர் தேவராஜ் அவர்களைத் தட்டிக்கேட்டபோது வாக்குவாதம் முற்றி, நான்கு பேரும் தேவராஜை சரமாரியாகக் கற்களால் தாக்கினர். மேலும் இதனைத் தடுக்கவந்த நபர்களையும் நான்கு பேரும் இணைந்து தாக்கிவிட்டுத் தப்பியோடினர்.

உணவக உரிமையாளரைத் தாக்கிய மூவர் கைது

பின்னர் காயமடைந்த தேவராஜ், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இது குறித்து பெரியமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இதில் தொடர்புடைய மூன்று பேர் பிடிபட்டனர்.

விசாரணையில் அவர்கள் பெரியமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (26), புளியந்தோப்பைச் சேர்ந்த சீனிவாசன் (19), மார்டின் (40) ஆகியோர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களைக் கைதுசெய்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னையில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது

ABOUT THE AUTHOR

...view details