தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தூர் அருகே மூவர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழப்பு! - ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் உள்பட மூவர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் உள்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர் அருகே மூவர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழப்பு!
சாத்தூர் அருகே மூவர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழப்பு!

By

Published : Jan 9, 2022, 1:12 PM IST

விருதுநகர்: சாத்தூர் அருகே உள்ள நென்மேனியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் - விஜயலட்சுமி தம்பதி. இவர்களது மகன் கேசவன் (10). பாலகிருஷ்ணன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களது சிவகாசியை சேர்ந்த உறவினர் ராஜகோபாலின் மகன் பூர்ணகோகுல் (10).

இந்நிலையில் நேற்று (ஜன.8) விஜயலட்சுமி, கேசவன், பூர்ணகோகுல் ஆகிய மூவரும் நென்மேனியில் உள்ள வைப்பாற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் குளிக்கையில் பூர்ணகோகுல் ஆழமான பகுதியில் உள்ள நீரில் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து விஜயலட்சுமி, கேசவன் ஆகிய இருவரும் சிறுவனை காப்பாற்ற சென்றுள்ளனர். இதில் மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மூன்று பேரின் உடல்களையும் மீட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து இருக்கன்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆற்றில் மூழ்கி மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தனியார் பேருந்தும் லோடு ஆட்டோவும் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details