தமிழ்நாடு

tamil nadu

கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த தனியார் வங்கி ஊழியர் கைது!

By

Published : Jan 23, 2020, 11:34 AM IST

Updated : Jan 23, 2020, 4:18 PM IST

சென்னை: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தனியார் வங்கி ஊழியர் உட்பட மூன்றுபேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

kanja
kanja

சென்னையை அடுத்த குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் வைஷ்ணவா பெண்கள் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி அருகே ஒரு கும்பல் கஞ்சா பொட்டலங்களுடன் நிற்பதாக சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் கல்லூரி வாயில் அருகே நின்றிருந்த இரு இளைஞர்களைப் பிடித்து விசாரித்தபோது, இருவரும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்லாவரம் பம்மல் நாகல்கேணியைச் சேர்ந்த அர்சத் ஆலம் (19) பம்மலைச் சேர்ந்த சாஜித் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு கஞ்சா கொடுத்தது, நாகல்கேணியைச் சேர்ந்த முகமது உசேன் (26) என விசாரணையில் தெரியவந்தது.

கஞ்சா பொட்டலங்களுடன் தனியார் வங்கி ஊழியர் உட்பட 3 பேர் கைது

எம்.பி.ஏ. பட்டதாரியான முகமது உசேன் ராமாவரத்தில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராகப் பணியாற்றிவருகிறார். தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் செல்போன் மூலம் கஞ்சா போதைக்கு அடிமையானவர்களைத் தொடர்புகொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களிடமிருந்து 450 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றி, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்ற பெண் உட்பட ஏழு பேர் கைது!

Last Updated : Jan 23, 2020, 4:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details