தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூத்தத் தமிழறிஞர் இளங்குமரனார் மறைவு தமிழுக்கு பேரிழப்பு- திருமாவளவன் - தனித்தமிழ் இயக்கம்

மூத்தத் தமிழறிஞர் இளங்குமரனார் மறைவிற்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

thol-thirumavalavan-tweet-condolence-ilangkumaranar
மூத்தத் தமிழறிஞர் இளங்குமரனார் மறைவு அன்னைத் தமிழுக்கு பேரிழப்பு- திருமாவளவன்

By

Published : Jul 26, 2021, 12:09 PM IST

சென்னை:மூத்தத் தமிழறிஞர் இளங்குமரனார் மதுரையில் உள்ள அவரது வீட்டில் முதுமை காரணமாக நேற்றிரவு (ஜூலை 25) இயற்கை எய்தினார். ஆதித்தமிழ் முறையில், திருக்குறள் ஓதி 4,621 திருமணங்களை நடத்திவைத்தவர் இளங்குமரனார்.

செந்தமிழ் சொற்பொருள்களஞ்சியம் 14 தொகுதிகளும், தேவநேயப்பாவணர் குறித்த ஆய்வு நூல்களான 'தேவநேயம்' 10 தொகுதிகளும் இவரது தமிழ் தொண்டிற்கு முக்கிய சான்றுகளாய் திகழ்கின்றன.

இவரின் மறைவிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "தமிழறிஞர் அய்யா இளங்குமரனார் இயற்கை எய்தியதை அறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரது மறைவு அன்னைத் தமிழுக்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அய்யா இளங்குமரனாருக்கு செம்மார்ந்த வீரவணக்கம்" எனக்குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தனது படைப்புகளுக்கான உரிமைகளை வாசகருக்கு வழங்கிய எழுத்தாளர்

ABOUT THE AUTHOR

...view details