தமிழ்நாடு

tamil nadu

உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு நிகழ்ச்சி: விறுவிறு அதிமுக!

By

Published : Nov 15, 2019, 11:24 PM IST

சென்னை: அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அம்பத்தூரில் நடைபெற்றது.

thiruvallur admk

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அம்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.அலெக்சாண்டர், அமைச்சர் பெஞ்சமின், அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு விருப்பமனு வழங்கி தொடங்கி வைத்தனர்.

புதியதாகத் தரம் உயர்த்தப்பட்ட ஆவடி மாநகராட்சி மேயர் பதவிக்கு பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறையின் முன்னாள் அமைச்சர் அப்துல் ரகீம், ஆவடி குமார், ஆர்.சி. தீனதயாளன் ஆகிய மூவர் விருப்பமனுக்களை அளித்துள்ளனர்.

விருப்ப மனு வாங்கும் அதிமுக நிர்வாகிகள்

மேலும், அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, திருவொற்றியூர், புழல், மாதவாரம், வில்லிவாக்கம், மதுரவாயல், சோழவரம், மணலி, போரூர், வளசரவாக்கம், வானகரம், நாராவரிகுப்பம் ஆகிய தொகுதிகளில் உள்ள 174 வார்டுகளுக்கான விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஏராளாமான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு விருப்ப மனுக்களைப் பெற்றனர்.

இதையும் படிங்க: மெரினாவில் நடைபாதை வியாபாரிகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details