தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிசிடிவி இருப்பதை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட திருடன்! - Police are investigating

சென்னை: சிட்லபாக்கம் அருகே வீட்டில் திருட வந்த நபர், சிசிடிவி கேமரா இருப்பதை கண்டவுடன் தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

தலையில் அடித்துக்கொள்ளும் கொள்ளையன்

By

Published : Oct 9, 2019, 4:19 PM IST

சென்னை சிட்லபாக்கம் ஜெயா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் அதேப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் யாரும் இல்லாததையறிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடந்த 25ஆம் தேதி திருட முயன்றார். வீட்டின் வெளிக்கதவை லாவமாக திறந்த அந்த நபர் உள்கதவை திறப்பதற்காக அங்குள்ள ஜன்னலில் வைத்திருந்த இரும்புக் கம்பியை எடுத்து வந்தார்.

வீட்டு கதவை திறக்கும் கொள்ளையன்
அப்போது வீட்டின் முன்புறம் சிசிடிவி கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மாட்டிக் கொண்டோம் என்ற அச்சத்தில் தலையில் அடித்துக் கொண்ட அவர் எதையும் திருடாமல் சென்றார். இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சிட்லபாக்கம் காவல்துறையினர் அந்த நபரை தேடி வருகின்றனர்.
கொள்ளையில் ஈடுபட முயன்ற கொள்ளையன்

ABOUT THE AUTHOR

...view details