தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலாமாண்டு கல்லூரி  மாணவர்களுக்கு சனிக்கிழமையும் வகுப்புகள்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Jan 27, 2023, 10:08 AM IST

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இனி சனிக்கிழமையும் கல்லூரி
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இனி சனிக்கிழமையும் கல்லூரி

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை கால தாமதமாக தொடங்கியது, இதனால் கல்லூரிகள் வழக்கம் போல் முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கப்படவில்லை. மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டு நவம்பர் 18 ஆம் தேதி முதலே முதலாம் ஆண்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இதனால் போதிய பாட வேலைகள் இல்லாமல், மாணவர்களுக்குரிய பாடங்கள் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படாமல் சூழல் உள்ளது. இந்த நிலையில் கல்லூரி கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "2022-23 நடப்பு கல்வி ஆண்டுக்குரிய பாடத்திட்டத்தை மே 1 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை, நவம்பர் 3 ஆவது வாரம் வரையிலும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு உரிய பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்க முடியாமல் உள்ளது. எனவே அனைத்து சனிக்கிழமைகளிலும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை முடிக்க கூடிய வகையில் வகுப்புகளை கல்லூரிகள் நடத்திக்கொள்ளலாம் . மேலும் கூடுதல் நேரமும் கல்லூரியில் வகுப்புகளில் நடத்தலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:wifi-ஆல் செல்போன் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய துப்பாக்கி; மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details