தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 1, 2020, 10:41 AM IST

ETV Bharat / state

கரோனா : சுமார் 7 லட்சம் பேரிடம் ஆய்வு

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை ஆறு லட்சத்து 88 ஆயிரத்து 473 நபர்களிடம் கரோனா தொற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

the-welfare-department-has-announced-that-7-lakh-people-have-been-surveyed-under-the-coronavirus-control-program
the-welfare-department-has-announced-that-7-lakh-people-have-been-surveyed-under-the-coronavirus-control-program

இது குறித்து, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக, நோய் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்குடன், தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மார்ச் 31ஆம் தேதி வரை ராணிப்பேட்டை, தஞ்சாவூர், வேலூர், கோயம்புத்தூர், விருதுநகர், செங்கல்பட்டு, மதுரை, ஈரோடு, சேலம், திருநெல்வேலி, சென்னை, திருப்பூர், கரூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 16 மாவட்டங்களில் மூன்றாயிரத்து 698 களப் பணியாளர்கள் வாயிலாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

அப்போது ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 815 வீடுகளில் வசிக்கும், ஆ லட்சத்து 88 ஆயிரத்து 473 நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது” என அதில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா: சுமார் 4 லட்சம் பேரிடம் கணக்கெடுப்பு

ABOUT THE AUTHOR

...view details