தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி திமுக பரப்புரையை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் பாஜகவும் வேல் யாத்திரை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பாஜகவின் வேல் யாத்திரைக்கு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் படியும், மத்திய அரசின் வழிக்காட்டுதல் அடிப்படையிலும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மீண்டும் தமிழ்நாட்டில் அரசியல் கூட்டங்கள், மதம் சார்ந்த வழிபாடுகள், கலாசார நிகழ்ச்சிகள் போன்றவற்றிக்கு நவம்பர் 16ஆம் தேதிவரை தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கலச்சார நிகழ்ச்சிக்கு மட்டும் சமூக இடைவெளியினை பின்பற்றி அரசு அனுமதி வழங்கி உள்ளது. அரசியல் கூட்டங்களுக்கு அரசு தடை விதித்து இருப்பதால், அரசியல் கூட்டங்களில் ஈடுபட்டு வரும் பாஜகவினரும் ,திமுகவினரும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.