தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘சரியான நேரம் இதுவே என்பதால் பாஜக அரசு இதனைச் செய்கிறது’ - இந்து ராம் பேச்சு - சென்னை மியூசிக் அகடமி

சென்னை: இந்துத்துவாவின் கொள்கைகளை நாட்டில் விதைக்க சரியான நேரம் இதுவே என்பதால் பாஜக அரசு இதனை செய்துவருவதாக பொது விவாதத்தில் தி இந்து குழுமத் தலைவர் ராம் கூறியுள்ளார்.

தி இந்து குழுமத் தலைவர் ராம்
தி இந்து குழுமத் தலைவர் ராம்

By

Published : Jan 28, 2020, 12:23 PM IST

Updated : Jan 28, 2020, 12:58 PM IST

சென்னை மியூசிக் அகாதமியில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பொது விவாதம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.பி. ஷா, தி இந்து குழுமத் தலைவர் என். ராம், சட்ட நிபுணர் உமா ராமநாதன், பத்திரிகையாளர் ரோகிணி மோஹன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தி இந்து குழுமத் தலைவர் ராம் பேச்சு

பொது விவாதத்தில் பேசிய தி இந்து குழுமத் தலைவர் என். ராம், "தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை இந்திய இறையாண்மைக்கு வெளியில் உள்ளது என்பது தெரிகிறது. இந்த மூன்றும் ஆயிரக்கணக்கான மக்களை தினந்தோறும் போராட்டங்களில் ஈடுபடத் தூண்டியுள்ளது. இந்தியா கடந்துவந்த சுதந்திரப் போராட்டம், வரலாறு, தியாகங்கள் உள்ளிட்டவைகள் இவற்றால் உடைக்கப்பட்டுள்ளன எனலாம்.

இந்துத்துவாவின் கொள்கைகளை நாட்டில் விதைக்க சரியான நேரம் இதுவே என்பதால் பாஜக அரசு இதனைச் செய்துவருகிறது. ஜே.என்.யூ, ஜாமியா மிலியா உள்ளிட்ட அனைத்து வன்முறைகளுக்கு பின்னாலும் ஒரு அதிகாரத்தை மக்களுக்கு உணர்த்த விரும்புகிறார்கள். ஆனால் மக்கள் தங்களின் நாட்டில் பேச்சு உரிமை, அடிப்படை உரிமை உள்ளிட்ட அரசியல் சாசனம் வழங்கிய உரிமையை அனுபவிக்க விரும்புவது தெரிகிறது.

இந்துத்துவா நேரடியாக மக்களாட்சி, ஜனநாயகத்திற்கு சவால்விட்டுள்ளது. மக்களின் உரிமைகள் அனைத்தும் அரசியலமைப்பின் சட்டங்களைத் திருத்தி மறுக்கப்பட்டுள்ளது. துர்பாக்கியமாக உச்ச நீதிமன்றமும் இதற்கு சரியான தீர்வு காணவில்லை" என்றார்.

Last Updated : Jan 28, 2020, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details