சென்னை: குன்றத்தூர் அடுத்த எருமையூரை சேர்ந்தவர் பிரகாஷ்(25). இவர் மீது கொலை வழக்கு உள்ள நிலையில், தனது மகனை (பிரகாஷ்) காணவில்லை என அவரது பெற்றோர் மறைமலைநகர் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு, பிரகாஷை அழைத்துச் சென்று வெட்டி படுகொலை செய்துவிட்டு திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள கிணற்றில் உடலை வீசி விட்டுச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து திருமுடிவாக்கத்தைச் சேர்ந்த கருத்து உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்த மறைமலைநகர் காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது “திருமுடிவாக்கம் பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் மாமுல் வாங்குவதில் பிரகாஷுக்கும் கருத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கஞ்சா போதைக்கு அடிமையான பிரகாஷ், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கருத்தை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.