தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபானக்கடை ஊழியர்களைத் தாக்கிய கும்பல் - liquor store employee attack

சென்னை: அண்ணனைத் தாக்கிய மதுபானக்கடை ஊழியர்களை அவரது தம்பி, தனது நண்பர்களுடன் சென்று தாக்கிய சம்பவம் நெற்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுபானக்கடை தாக்குதல்  மதுபானக்கடை ஊழியர்களைத் தாக்கிய கும்பல்  The gang that attacked a liquor store employee in chennai  liquor store employee attack  chennai crime latest news
மதுபானக்டை ஊழியர்களைத் தாக்கிய இருபது பேர் கொண்ட கும்பல்

By

Published : Dec 17, 2019, 4:04 PM IST

சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்(25). இவர் நெற்குன்றம் சாலையில் உள்ள மென்ஸ் தர்பார் என்ற மதுபானக்கடையில் கடந்த 15ஆம் தேதி இரவு மது அருந்தச் சென்றுள்ளார். அப்போது, குடிபோதையில் கடை ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, கடை ஊழியர்கள் தாக்கியதில் ஆகாஷிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனை அறிந்த அவரது சகோதரர் மோனிஷ் குமார்(22) தனது 20 நண்பர்களுடன் அதே மதுபானக்கடைக்கு நேற்றிரவு சென்றுள்ளார். அப்போது, கடை ஊழியர்களிடம் மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்டு கடை ஊழியர்களான புவனேஷ்வரன், அறிவழகன், சிவா ஆகிய மூன்று பேரை சரமாரியாக அவர்கள் தாக்கியுள்ளனர்.

இதனால், காயமடைந்த ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக கோயம்பேடு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து மோனிஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், தனது சகோதரர் ஆகாஷை தாக்கிய ஊழியர்களை பழிவாங்கவே அவர்களை தாக்கியதாக கூறியுள்ளார். இருபது பேர் கொண்ட கும்பல் மதுபானக்கடையில் புகுந்து ஊழியர்களைத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெட்ரோல் பங்க் ஊழியரை கத்தியைக் காட்டி மிரட்டியவர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details