சென்னை: தமிழில் தனது முதல் படமான 'ராக்கி' என்ற படத்திலேயே யார் இந்த இயக்குநர் என்று பிரமிப்புடன் பார்க்க வைத்தவர் அருண் மாதேஸ்வரன். அதனை தொடர்ந்து ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தை இயக்கினார். அதுவும் வித்தியாசமான படமாக அமைந்தது. இரண்டுமே பழிவாங்கும் கதையாக இருந்தாலும் வித்தியாசமான திரைக்கதை மூலம் பாராட்ட வைத்தார்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநராக அறியப்பட்டவர் அருண் மாதேஸ்வரன்.
இதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது படம் நடிகர் தனுஷ் கூட்டனியில் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை பிரமாண்டமான முறையில் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகையாக பிரியங்கா மோகன் நடிக்கின்றனர்.மேலும் இப்படத்தில்,தெலுங்கு பிரபல நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தில் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ்,குமரவேல்,டேனியல் பாலாஜி,மூர்,நாசர்,விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத்தொடர்ச்சிமலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் முக்கிய கதா பாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளனர்.அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வந்தது. உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்துவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அந்தப் பகுதியில் அதிக சத்தத்துடன் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.