சென்னை:ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து காவல்துறையில் ஆர்டர்லி முறை பின்பற்றப்பட்டுவருகிறது. இதன்மூலம் காவலர் பணிக்கு தகுதியானவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் வீட்டுப் பணிகளை செய்வதற்காக பணியமர்த்தப்படுகின்றனர். தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்டலிகள் அதிகாரிகளின் வீடுகளில் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் வீடுகளில் பணிபுரியும் ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும், இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் வீடுகளில் பணியாற்றிய 19 ஆர்டர்லிகள் திரும்ப பெறப்பட்டனர். இதனிடையே நேற்று ஆங்கிலேயரின் ஆர்டர்லி முறை தொடர்வது வெட்கக்கேடானது என்றும் இந்த முறையை ஒழிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் 18ஆம் தேதிக்குள் டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.