சென்னை: சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ படத்தின் நன்றி அறிவிப்பு விழா இன்று (அக்.05) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சித்தார்த், இயக்குனர் அருண் குமார் மற்றும் சிறப்பு விருந்தினராக இயக்குனர் சசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
படம் குறித்து இயக்குனர் அருண்குமார் பேசும் போது, “இந்த படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி. சிந்துபாத் படத்திற்குப் பிறகு எனது டீம் என்னை முழுதாக நம்பினார்கள். சித்தார்த் போன்ற மனிதரைப் பார்ப்பது அரிது. இப்படத்தை என்னைவிட தோளில் சுமந்து வருபவர். சித்தார்த்தின் நடிப்புக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து, நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் சசி, “கதாநாயகியை பற்றி தவறாக பேசும் போது ஹீரோ அடித்து விடுகிறார். இது சாதாரணமானது. ஆனால் இந்த படத்தில் சற்று வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஆர்ட் இருக்கிறது.
இந்த படத்தில் இவருடைய டிரான்ஸ்பர்மேஷன் அவ்வளவு அழகாக இருந்தது. இது வேற லெவல் படம். குழந்தை வன்கொடுமை மட்டுமில்லை. நிறைய விஷயங்கள் இருக்கிறது. இது ரொம்ப எமோஷனலான படம். இது என்டர்டெய்னிங்கான படம்” என்றார்.
மேலும் “சித்தார்த் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்கிறார். என் படம் ஓடுவது போன்ற சந்தோஷம் தான் எனக்கு. தமிழ் சினிமாவில் நல்ல படம் பண்ணுவது ஈசி. ஆனால் நல்ல படத்தை வெற்றிகரமாக கொடுப்பது கஷ்டம். இந்த படத்தை வெற்றிகரமாக கொடுத்துள்ளார்கள்” என்று நன்றி தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த் பேசுகையில், “சித்தாவின் வெற்றியை கொண்டாடும் வகையில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி. இது ரொம்ப ரொம்ப சந்தோஷமான தருணம். ஒரு நல்ல படமாக எடுத்து, வெற்றியை நோக்கி கொண்டு செல்லும் தருணம். கதையின் கருவை கேட்டதும், இந்த படம் எடுக்க வேண்டும் என்று தோன்றியது.