சென்னை ராயப்பேட்டையில் உள்ள அருள்மிகு பெரியபாளையத்தம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோயிலுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; கோயில் நிலத்தில் மூன்று அடுக்கு கொண்ட கட்டடம் கட்டப்பட்டிருப்பதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.