தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலன் மிரட்டலால் இளம்பெண் தற்கொலை - சென்னை அண்மைச் செய்திகள்

நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில், காதலன் புகைப்படத்தைக் காட்டி மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை தீர்வல்ல!
தற்கொலை தீர்வல்ல!

By

Published : Aug 13, 2021, 10:53 PM IST

சென்னை:திருவண்ணாமலையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னையில் தனியார் தொழிற்சாலையில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலித்த சமயத்தில், இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி இளம் பெண்ணுக்கு, திருவண்ணாமலையைச் சேர்ந்த நபர் ஒருவருடன் திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

தற்கொலை தீர்வல்ல!

புகைப்படங்களைக் காட்டி மிரட்டிய காதலன்

இதனையறிந்த இளம்பெண்ணின் காதலர், இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காண்பித்து மிரட்டியுள்ளார்.

இதனால் இளம்பெண் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (ஆக.12) அவர் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அயனாவரம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட டெல்லி சிறுமி: மீதமிருந்த உடல் பாகங்களை தகனம் செய்த பெற்றோர்

ABOUT THE AUTHOR

...view details