தமிழ்நாடு

tamil nadu

வேலைவாய்ப்பு தகவல் - ரயில்வேதுறையில் தொழில்நுட்பப் பணியாளர் காலிப்பணியிடங்கள்

By

Published : Oct 13, 2022, 6:01 PM IST

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RCIL) என்பது ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தொழில்நுட்பப் பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரயில்வேதுறை
ரயில்வேதுறை

காலிப்பணியிடங்கள்:

L-1 Engineer – 10

L-2 Engineer – 6

L-3 Engineer – 2

Operation/Project Manager – 1

Tool SME – 1

L-2 Engineer (Assets and Patch Management) – 2

L-1 Engineer ( ITSM) – 1

L-2 Engineer ( ITSM) – 1

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து BE/B.Tech (CSE/ECE/IT)/ MCA/M.Sc. (CS)/ Graduate Engineer/ Any Graduate/ Diploma முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வுமுறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://www.railtelindia.com/images/careers/Annexure%20III%20-%20Application.pdf என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து முறையாக பூர்த்தி செய்து பொது மேலாளர், ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், 4வது தளம், ஈ.வி.ஆர். பெரியார் உயர் சாலை, தலைமை நிர்வாக அலுவலகம், தெற்கு ரயில்வே, எழும்பூர், சென்னை, தமிழ்நாடு – 600008 என்ற முகவரிக்கு 15.10.2022 தேதிக்குள் சென்றடையும் படி அனுப்ப வேண்டும்.

இதையும் படிங்க: ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் வேலைவாய்ப்பு...

ABOUT THE AUTHOR

...view details