தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜாக்டோ-ஜியோ விவகாரம்: கலந்தாய்வுக்கு முன்னர் பணியிட மாற்றம்? - Request teachers to re employ in the old workplace

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பணியிட மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களை கலந்தாய்வுக்கு முன்னரே மீண்டும் பழைய பணியிடத்தில் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ-ஜியோ விவகாரம்: கலந்தாய்வுக்கு முன்னர் பணியிட மாற்றம்?
ஜாக்டோ-ஜியோ விவகாரம்: கலந்தாய்வுக்கு முன்னர் பணியிட மாற்றம்?

By

Published : Jan 7, 2022, 7:20 AM IST

சென்னை: ஜாக்டோ-ஜியோ போராட்டக் காலத்தில் ஆசியரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்து, அவர்கள் முன்பு பணியாற்றிய பணியிடங்களிளேயே நியமிக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் அரசுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “ஆசிரியர், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 2019ஆம் ஆண்டின் ஜனவரி 22 முதல் 30ஆம் தேதி வரையில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். அவ்வாறு மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களது பணியிட மாறுதலை ரத்து செய்து பழைய பணியிடத்திலேயே பணியாற்ற அனுமதி வழங்க வேண்டுமென பல்வேறு ஆசிரியர் அமைப்புக்கள் கோரிக்கை வைத்தது.

அதன் அடிப்படையில் ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். மேலும் போராட்டக் காலத்தில் பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் பழைய பணியிடத்திலேயே பணியமர்த்தப்பட பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் அறிவித்த்திருந்தார்.

தற்போது தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் பணியிட மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிட்டுள்ளார். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களையும் கலந்தாய்விற்கு முன்னர் பணியிட மாற்றம் செய்து, மீண்டும் பழைய பணியிடத்தில் நியமிக்க உத்தரவிட வேண்டுகிறோம். அப்போதுதான் முதலமைச்சரின் அறிவிப்பு ஆசிரியர்களுக்குப் பயன் தருவதாக அமையும். இதற்கான ஆணை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மூன்றரை லட்சம் சிலைகள் பாதுகாப்பில் கேள்விக்குறி? - எச்சரிக்கும் பொன் மாணிக்கவேல்

ABOUT THE AUTHOR

...view details