தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 9, 2019, 8:16 AM IST

ETV Bharat / state

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

teachers-common-entrance-counsiling-date-announce

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் மாதம் நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டது. அதற்கான அரசாணையில் ஏற்கனவே பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர் குறைந்தது மூன்று ஆண்டுகள் அந்தப் பள்ளியில் பணி புரிந்தால் மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என நிபந்தனை விதித்தது.

அதனை எதிர்த்து ஆசிரியர்கள் சிலர் நீதிமன்றம் சென்றனர். அந்த வழக்கின் மீதான தீர்ப்பு சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவர்களுக்கு மட்டும் ஓராண்டு என நிபந்தனையில் தளர்வு செய்து புதிய அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதியை பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.

கலந்தாய்வு நடைபெறும் தேதிகள்:

  • வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
  • நகராட்சி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வும், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வும் வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது.
  • அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும், அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
  • அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள்ளும் மற்றும் மாவட்டம் விட்டு மாறுதல் கலந்தாய்வு 13ஆம் தேதி நடைபெறுகிறது.
  • தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 14ஆம் தேதி நடைபெறுகிறது.
  • உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் வருவாய் மாவட்டத்திற்குள்ளும்,மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் 15ஆம் தேதி நடைபெறுகிறது.
  • தையல் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு 16ஆம் தேதி நடைபெறுகிறது என கூறியுள்ளார்.

இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள ஒருவர் அந்தப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஓராண்டு பணி முடிக்காதவர்கள் கலந்தாய்வில் பங்கு பெறுவதற்கு தீர்ப்பு பெற்றவர் மட்டும் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும்.

நீதிமன்றத்தின் மூலம் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி பெற்றவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் மூலம் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

இதையும் படிக்க: பெண்களுக்கு உதவ வருகிறாள் "தோழி" - புதிய திட்டத்தை தொடங்கிய மாநகர காவல்துறை..!

ABOUT THE AUTHOR

...view details