தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மே 1 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

சென்னை: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் மூடியிருக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

By

Published : Apr 26, 2019, 8:51 AM IST

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தொழிலாளர்களின் சமூக, பொருளாதார சாதனை ஆகியவற்றை குறிக்கும் விதமாக மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் முடியிருக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனைக்கடைகள், பார்கள் அனைத்தும் கண்டிப்பாக முடியிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்பது இதன் முலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details