இது தொடர்பாக தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு 2021 குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கருணாமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,’அண்ணா பல்கலைக்கழகத்தின் துறை கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைகழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றிலுள்ள எம்இ, எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., எம்.பிஏ., மற்றும் எம்சிஏ ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு உரிய நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு ஜனவரி 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி மதியம் 5மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை இறுதியாக பிப்ரவரி 17ஆம் தேதி வரை சரிப்பார்த்து விண்ணப்பிக்கமுடியும்.