தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

' இது சாத்தியமானால் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கிடைக்கும் '  - அமைச்சர் பாண்டியராஜன் - India-Sri Lanka agreement should be possible

சென்னை: இந்தியா - இலங்கைக்கு இடையே ஒப்பந்தம் போடப்படுமானால் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது சாத்தியமே என சட்டப்பேரவையில் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

minister pandiarajan
minister pandiarajan

By

Published : Jan 8, 2020, 6:39 PM IST

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலின், இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு இந்தியச் சட்டத்தில் இடமில்லை என்றும்; இதன் தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், இந்தியச் சட்டத்தில் இடமில்லாத பட்சத்தில் இரட்டைக் குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை எனக் கூறினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்;

"ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டினருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு அந்த இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட வேண்டும். அதனடிப்படையில் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் இரட்டைக் குடியுரிமை தொடர்பாக போட்ட ஒப்பந்தத்தின் படி அங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம்: சட்டப்பேரவையில் மூன்றாம் நாளும் காரசார விவாதம்

இதேபோன்று இந்தியா - இலங்கைக்கு இடையே இரட்டைக் குடியுரிமை தொடர்பாக ஒப்பந்தம் போடப்படுமானால், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது சாத்தியமே" என விளக்கமளித்தார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details