தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 5, 2022, 2:05 PM IST

ETV Bharat / state

"போர்க்களத்தில் சிகிச்சை அளித்தோம்"-உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர் தகவல்

உக்ரைனில் இருந்து டெல்லி வழியாக 13 விமானங்களில் 122 பேர் சென்னை விமான நிலையம் வந்தனர்.

சென்னை வந்த மாணவர்கள்
சென்னை வந்த மாணவர்கள்

சென்னை:உக்ரைனில் போர் நடப்பதால் கடந்த சில தினங்களாக இந்தியா அரசு சிறப்பு விமானங்கள் இயக்கி இந்தியர்களை டெல்லி, மும்பை நகரங்களுக்கு அழைத்து வந்தன. தமிழ்நாட்டிற்கு 6ஆவது நாளாக இன்று (மார்ச் 05) அதிகாலை 13 விமானங்களில் சென்னை, திருச்சி உள்பட பல பகுதிகளைச் சேர்ந்த 122 மாணவ - மாணவிகள் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.

சென்னை வந்தவர்களை தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை துணை ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் வரவேற்றனர். போர் நடக்கும் பகுதியான கார்கிவ் நகரில் இருந்து மாணவர்கள் வந்திருந்தனர். மாணவர்களை கண்டதும் குடும்பத்தினர் கட்டி பிடித்து கண்ணீர் மல்க வரவேற்றனர். பின்னர் சொந்த ஊருக்கு அரசு செலவில் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். டெல்லியில் இருந்து 27 பேர் கோவைக்கும், ஒருவர் பெங்களுருக்கும், 4 பேர் திருவனந்தபுரத்திற்கும் விமானம் முலம் தமிழ்நாடு அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசின் அயலக நலத்துறை துணை ஆணையர் ரமேஷ் கூறுகையில், “உக்ரைனில் எந்த பகுதியில் மாணவர்கள் இருந்தாலும் அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் பிசாவு என்ற நகரில் வாகனம் இல்லாததால் எல்லைக்கு வர முடியவில்லை என்றனர். எல்லைக்கு வாகனத்தில் வர மாணவர்களுக்கு 13 லட்சம் ரூபாய் பணம் உடனே வழங்கப்பட்டது. அங்கிருந்து எல்லைக்கு வர வாகன வசதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பினன்ர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவர் அன்பு நிதி கூறுகையில், “கார்கிவ் பகுதியில் தங்கி படித்து வந்தேன். மார்ச் 1ஆம் தேதி வரை மெட்ரோவில் இருந்தேன். உணவுக்கு மிகுந்த சிரமப்பட்டோம். வடகிழக்கு பகுதியில் இருந்ததால் போலாந்து எல்லைக்குச் செல்ல ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் இருந்தது. எந்தவொரு வாகன வசதியும் இல்லை. நாங்களாக வாகன வசதியை ஏற்படுத்தி போலாந்து எல்லைக்கு வந்தோம். டெல்லியில் தமிழ்நாடு அதிகாரிகள் கவனம் செலுத்தி சென்னைக்கு அழைத்து வந்தனர். முதலமைச்சருக்கு நன்றி.

கிவ், சுமி போன்ற பகுதியில் நிறைய பேர் உள்ளனர். வாகன வசதி இல்லாததால் வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். கார்கிவ்வில் ரயில் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர். உக்ரைனிர்கள் பெண்கள், குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தந்து ரயிலில் ஏற்றினார்கள். ஆண்களை உடனே ஏற்ற விடவில்லை. உணவுக்கு மிகுந்த சிரமப்பட்டோம். உக்ரைனியர்களுக்கு மருத்துவ சிகிச்சையளித்தோம். இதனால் உக்ரைனியர்கள் உணவு தந்தனர்” என்றார்.

மாணவரின் தாய் அனிதா கூறுகையில், “உக்ரைனில் உள்ள மாணவர்கள் வந்தால் தான் நிம்மதியடைவோம். எனகள் பிள்ளைகள் படிக்க இங்கு வாய்ப்பு கிடைத்தால் ஏன் அங்கு அனுப்புகிறோம். ஆசைப்பட்டு அனுப்பவில்லை; கஷ்டப்பட்டு தான் அனுப்புகிறோம். அங்கு படித்து வந்து இங்கு சேவை செய்வோம். இந்திய அரசு மாணவர்களுக்கு படிக்க உதவினால் நாங்கள் ஏன் அனுப்ப போகிறோம். இந்தியாவில் படிக்க கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

சென்னை வந்த மாணவர்கள்

சென்னை முகப்பேரைச் சேர்ந்த மாணவர் கவுதம் கூறுகையில், “போர் நடக்கும் பகுதியில் உள்ளவர்களை ரஷ்யா வழியாக தான் அழைத்து வர முடியும். சாலை வழியாக வர முடியாது. ரயிலில் அதிகமானவர்கள் செல்ல கூடிய நிலை உள்ளது. போரில் உயிரிழந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் எனது நண்பர் தான். யாரும் எதிர்ப்பாராத நிலையில் போர் நடந்தது. இதில் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:மீட்புப்பணிக்காக போரை நிறுத்திய ரஷ்யா

ABOUT THE AUTHOR

...view details