தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உணவகங்களில் குளிர்சாதன வசதி பயன்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி!

சென்னை: உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

By

Published : Sep 5, 2020, 9:52 PM IST

உணவகங்களில் குளிர்சாதன வசதி பயன்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி!
உணவகங்களில் குளிர்சாதன வசதி பயன்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி!

கரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் தற்போது சில தளர்வுகளுடன் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி, கடைகள், உணவகங்கள், ஷோரும்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மக்களின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுளை தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்து வருகிறது. அதில், உணவகங்களில் மட்டும் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசின் விதிகளைப் பின்பற்றி உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதியளித்திருக்கிறது. மேலும் உணவகங்கள், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கவும், இரவு 9 மணி வரை பார்சல் வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைதான பிக்பாஸ் போட்டியாளர்!

ABOUT THE AUTHOR

...view details