தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் 24 மணி நேரத்திற்கு மேல் மருத்துவக் கழிவை வைக்கக்கூடாது - -bio-medical-wastage-guidelines

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள வீடுகளில் 24 மணி நேரத்திற்கு மேல் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய மருத்துவக் கழிவுகளை சேமித்து வைக்கக் கூடாது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது.

Breaking News

By

Published : May 7, 2020, 4:17 PM IST

கரோனா வைரஸ் தாக்குதலுக்கான லேசான அறிகுறியுடன் உள்ளவர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வீட்டிலுள்ளவர்கள் பயன்படுத்திய முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அல்லது வீடுகள், வீட்டு பாரமரிப்பு வசதிகளில் உள்ளவர்கள் , கரோனா நோய் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் முகாம்களில் உள்ளவர்களின் மருத்துவக்கழிவுகளை தனியாக பிரித்து, மருத்துவ கழிவுகள் சேகரிக்கப்படும் மஞ்சள் நிற கொள்கலன்களிலோ, பைகளிலோ சேகரித்து, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்ற துப்புரவு பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும்.

மருத்துவ கழிவை கையாளும் முறை

பொது மக்கள், கரோனா வைரஸ் நோய் தொற்றுக் காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் உபயோகித்த கை உறைகள் மற்றும் முகக்கவசங்களை அகற்றுவதற்கு முன்பு 72 மணி நேரம் காகித பைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து பின்னர் பொது கழிவுகளுடன் வெளியேற்ற வேண்டும்.

முகக்கவசங்களை மறுஉபயோகப்படுத்த முடியாத வண்ணம் வெட்டி துண்டுகளாக்கி வெளியேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கவசம்

செய்யக்கூடாதவை பட்டியலில், பிற கழிவுகளுடன் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கழிவுகளை சேகரிக்கவோ, சேமிக்கவோ கூடாது என்றும், 24 மணிநேரங்களுக்கு மேல் கரோனா வைரஸ் நோயாளிகளின் கழிவுகளை சேமித்து வைத்தல் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஊரடங்கில் ஐ.டி நிறுவனங்கள் எப்படி செயல்பட வேண்டும் - அரசு அறிவுரை !

ABOUT THE AUTHOR

...view details