தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 15, 2019, 8:26 PM IST

ETV Bharat / state

’பாத்திமாவின் தற்கொலைக்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும்’

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

Tamilnadu Government must clarify the cause of iit student Fathima latheef's suicide

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தற்கொலைகள் தொடர்கதையாகும் ஐஐடியில், மாணவி பாத்திமாவின் தற்கொலைக்கு காரணம் என்னவென்று தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஐஐடி நிர்வாகமும், அதனை நடத்தும் மத்திய அரசும் இதற்கு பதில் கூற வேண்டும். கல்வி பயிலும் இடத்தில் தற்கொலைக்கான காரணம் என்ன?, எந்தவிதமான துன்புறுத்தல்கள் அங்கு நடக்கின்றன?, தற்கொலை செய்யும் அளவிற்கு இளம் தலைமுறைகள் ஏன் செல்கிறார்கள்? என்பது குறித்தும் நாம் ஆராய வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல் ஆணையச் செயலாளரை மாற்றுவதென்பது உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு எதிரானது. அவர் எதற்காக மாற்றப்பட்டார் என்பதற்கு முதல்வர் விளக்கமளிக்க வேண்டும். என்னுடைய சந்தேகமெல்லாம், தமிழ்நாடு அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஏதாவது பிரச்னை வராதா என அவர்கள் காத்திருக்கிறார்கள்” என்றார்.

கே எஸ் அழகிரி பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், ”ரஃபேல் விவகாரத்தைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் ஒரு பக்கத்தை மட்டுமே ஊடகங்கள் காட்டுகின்றன. விமானங்களை கொள்முதல் செய்ய நேரடியாக பிரதமரே செல்லக் காரணம் என்ன என்பதுதான் காங்கிரசின் கேள்வி. பேரம் குறித்த ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்படைக்கத் தயாரா?, விமானத்தின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்தது ஏன்?, இவையனைத்திற்கும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு!

ABOUT THE AUTHOR

...view details