தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 21, 2020, 2:25 PM IST

ETV Bharat / state

கரோனா பாதிப்பு: அரசுக்கு குவியும் நிவாரண நிதி

சென்னை: கோவிட் 19 வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள உதவியாக அரசுக்குப் பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்துவருகின்றனர்.

அரசுக்கு குவியும் நிவாரண நிதி
அரசுக்கு குவியும் நிவாரண நிதி

கோவிட் 19 வைரஸ் பெருந்தொற்று பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொழில் நிறுவனங்கள், கடைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில், அமைப்புசார தொழிலாளர் நலனுக்காக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சண்முகத்தை நேரில் சந்தித்து, இரண்டு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

இதைப் போலவே, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் சார்பாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: 2ஆவது மனைவியின் மகளைத் திருமணம் செய்தவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details