தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் - நோயாளிகள் அவதி! - tamilnadu doctors strike

சென்னை: தமிழ்நாடு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்களின் போராட்டத்தினால் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

sister

By

Published : Aug 27, 2019, 3:03 PM IST

  • கடந்த 10 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத சிறப்பு ஊதியத்தை புதுப்பித்து தரவேண்டும்.
  • இந்திய மருத்துவக் குழு ஆணைப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்களின் பணியிடங்களின் எண்ணிக்கையை 4டி -2 என்ற அரசாணையின் மூலம் பணியிட மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைப்பதைக் கைவிடவேண்டும்.
  • கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
  • பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்குப் பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும்
    மருத்துவர்களுக்காக காத்திருக்கும் புறநோயாளிகள்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, பெரம்பலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதுமுள்ள மருத்துவர்களின் போராட்டத்தினால், புற நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், இன்று வழக்கத்திற்கு மாறாக அதிக நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்ததால், நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இன்று காலை 7.30 மணிக்குத் தொடங்கியுள்ள இந்தப் போராட்டம் நாளை காலை 7.30 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details