தமிழ்நாட்டில் இன்று 2,516 பேருக்கு கரோனா; 64 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு! - 64 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு!
![தமிழ்நாட்டில் இன்று 2,516 பேருக்கு கரோனா; 64 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு! tamilnadu-corona-virus-count-today](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7739493-535-7739493-1592914851633.jpg)
17:50 June 23
தமிழ்நாட்டில் இன்று 2,516 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 64,603ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 2,516 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் இன்று 1,380 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று கரோனாவுக்கு 39 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 833ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,227 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இதுவரை குணமடைந்துள்ளனர் எண்ணிக்கை 35,339ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,603ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,487 பேருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,000ஆக உயர்ந்துள்ளது.