சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு இன்று (ஜூலை 11) காலை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்றார். பின்னர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து அவர் கேட்டறிந்தார்.
கரோனா நிவாரண நிதியாக ₹10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விஜயகாந்த் வழங்கினார்.
கரோனா நிவாரண நிதி வழங்கிய விஜயகாந்த் அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராஜா உள்ளிட்டோர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
இந்த சந்திப்பின் போது, விஜயகாந்த் மனைவி பிரேமலதா, எல்கே.சுதிஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: கெத்து காட்டிய மெஸ்ஸி - கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா