தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘மக்களால் நான்’ புத்தகத்தை வெளியிட்ட முதலமைச்சர் - cm book release

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா .வளர்மதியின் மகன் சி.பா. மூவேந்தன் எழுதிய “ மக்களால் நான் ” புத்தகத்தை வெளியிட்டார்.

‘மக்களால் நான்’ புத்தகத்தை வெளியிட்ட முதலமைச்சர்
‘மக்களால் நான்’ புத்தகத்தை வெளியிட்ட முதலமைச்சர்

By

Published : Sep 9, 2020, 4:20 AM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா .வளர்மதியின் மகன் சி.பா. மூவேந்தன் எழுதிய “ மக்களால் நான் ” புத்தகத்தை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழ் ஆட்சிமொழி , தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் / உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) கோ . விசயராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து சி.பா. மூவேந்தன் தனது ஆய்வு நூலை வழங்கி வாழ்த்து பெற்றார்.

ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்த சி.பா. மூவேந்தன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details