மா. சுப்பிரமணியத்தின் இளையமகன் மறைவு: முதலமைச்சர் இரங்கல் - சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர்
சென்னை: சட்டப்பேரவை உறுப்பினர் சுப்பிரமணியத்தின் இளையமகன் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த அன்பழகன்
சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்பிரமணியனின் இளைய மகன் சு. அன்பழகன் உடல்நலக் குறைவால் இன்று (அக்டோபர் 17) காலமானார்.
இதனையடுத்து சுப்பிரமணியத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டு ஆறுதல் கூறினார்.