தமிழ்நாடு

tamil nadu

ஊரடங்கு : 97 நாட்களில் 16 கோடி ரூபாயை நெருங்கும் அபராதத் தொகை

By

Published : Jun 29, 2020, 3:00 PM IST

சென்னை : ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் 97 நாட்களில் ஏழு லட்சத்து 61 ஆயிரத்து 118 பேரை காவல் துறையினர் கைது செய்து விடுவித்துள்ளதாகவும், 15 கோடியே 99 லட்சத்து 65 ஆயிரத்து 345 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

Tamilnadu case report
ஊரடங்கு விதிமீறல்


நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கி ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் பொது மக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல் துறை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டும் அபராதம் வசூலித்தும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 97 நாட்களில் தடையை மீறியதாக ஏழு லட்சத்து 61 ஆயிரத்து 118 பேரை தமிழ்நாடு காவல் துறை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது.

ஐந்து லட்சத்து 71 ஆயிரத்து 492 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 15 கோடியே 99 லட்சத்து 65 ஆயிரத்து 345 கோடி ரூபாய் அபராதமாக இவர்களிடம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கல்யாணம் நடத்தி 100 பேருக்கு கரோனா பரப்பிய குடும்பம் - ரூ.6.26 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details