தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 8, 2020, 3:00 PM IST

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 8 லட்சத்து 23 ஆயிரம் பேர் கைது!

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து 106 நாள்களான நிலையில், காவல் துறை இதுவரை தடையை மீறியதாக 8 லட்சத்து 23 ஆயிரத்து 488 பேரை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது.

இதுவரை 8 லட்சத்து 23 ஆயிரம் பேர் கைது!
இதுவரை 8 லட்சத்து 23 ஆயிரம் பேர் கைது!

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. உத்தரவை மீறிய இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து 106 நாள்களான நிலையில், காவல் துறை இதுவரை தடையை மீறியதாக 8 லட்சத்து 23 ஆயிரத்து 488 பேரை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது. மேலும், 6 லட்சத்து 24 ஆயிரத்து 720 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை அபராதமாக 17 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 276 ரூபாய் வசூலித்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:சோதனைச் சாவடியில் கையூட்டு வாங்கும் அலுவலர்கள்; சிசிடிவி பதிவில் கையும் களவுமாக சிக்கினர்!

ABOUT THE AUTHOR

...view details