சென்னை ஆர்கே நகர் பகுதியைச் சேர்ந்த 13 பெண்கள் உள்பட 36 பேர் நேபாளத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் தாயகம் திரும்புவதற்குள் கரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் நாடு முழுவதும் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்துகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தியா - நேபால் எல்லையான சோனூல் (Sonool) என்ற பகுதியில் சிக்கித் தவித்த சுற்றுலா பயணிகள், தங்களின் நிலை குறித்து தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக மக்களவைத் தலைவருமான ஓ.பி. ரவீந்திரநாத் குமாரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.