கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல தளர்வுகளுடன் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளின் அடிப்படையில் கடந்த மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்ட போதிலும், சர்வதேச விமான சேவைக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.
இதனால் உலகின் பல்வேறு நாடுகளிலும் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, மத்திய அரசு ’வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக குவைத், பக்ரைன், செஷல்ஸ் ஆகிய நாடுகளில் சிக்கிதவித்த 487 தமிழர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். இவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில், குவைத்திலிருந்து 158 பேர் குவைத் ஏா்லைன்ஸ் சிறப்பு தனி விமானம் மூலமும், பக்ரைனிலிருந்து 172 பேரும், செஷல்சிலிருந்து 157 பேரும் ஏா்இந்தியா சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.