சென்னை:வெப்பநிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 16) முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 20ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை: தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இன்றும் (ஏப்ரல் 16), நாளையும் (ஏப்ரல் 17) அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.